Sri Rama Anjaneya Swamy
Sri Anjani Matha temple,R.KALLUMADAM
Sri Vishwakarma blessed Sri Rama Anjaneya Swamy and Sri Anjani Matha temple is located on R.Kallumadam, Virudhunagar district in Tamilnadu.
தல வரலாறு; சீதை இருந்த இடத்தை இலங்கை சென்று,அறிந்து கொண்ட வாயுபுத்ர அனுமான், ஶ்ரீ ராமரிடம் சீதை அன்னையின் நிலை குறித்து தெரிவித்தார்.பின், ஶ்ரீ ராமர் வானர சேனைகளுடன் இலங்கை செல்ல ஆயத்தமானார். ஆஞ்சநேய சுவாமியின் வேண்கோளுக்கு இணங்க, இலக்குவனார் வானர இலவரசனும் வாலியின் புதல்வனுமான அங்கதனுடைய தோள்களின் மீதும், ஶ்ரீ ராமர் அனுமனுடைய தோள்களின் மீது ஏறிக் கொண்டு, வட திசையிலிருந்து தென்திசை நோக்கி பயணித்தனர். வானரர்களில் வாயுபுத்தர அனுமான் மட்டுமே பறக்கும் சக்தி படைத்தவர். ஆஞ்சநேயர் ராமருடன் முன்னே பறந்து செல்ல மற்றோர் பின் தொடர்ந்தனர்.தற்போது ஆலயம் அமைந்துள்ள இவ்விடத்தில் அனுமான் களைப்பு தீர, ஶ்ரீ ராமரை தூக்கி கொண்ட நிலையிலேயே சிறிது நேரம் அமர்ந்து பின் சென்றார். இதன்காரணமாக, ஶ்ரீ ராம ஆஞ்சநேயரின் சக்தி வெளிப்பட்டு, பன்னெடுங்காலமாக ஶ்ரீ ராமரை தன் தோள்களில் சுமந்தவாறு காட்சி அளித்துக்கொண்டிருக்கிறார்.